எண்ணிலடங்கா
பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.
கீரை வகைகளை உணவோடு சேர்க்கச்
சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை
வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.
அந்த வகையில் முருங்கைக் கீரையின்
பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை
மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம்
கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு
தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம்
படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக
வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில்
இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல
வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய்.
உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க
வல்லது. இதன் சுபாவம் சூடு.
ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும் தாதுவும்
பெருகும். எனவேதான், இக்கீரைக்கு
'விந்து கட்டி' என்ற பெயரும்
இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய்
பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இதை நெய் சேர்த்தோ அல்லது
புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப்
பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு
தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை
நறுக்கி விட்டு பின் மிளகு
ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து
உண்டு வந்தால் கை, கால்
உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை
இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி
சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின்
உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள்
நீங்கும்.
முருங்கைப்
பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது.
உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக்
கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்
புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய
வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட
மருந்து.
முருங்கைக்
காயை வேக வைத்து கொஞ்சம்
உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும்
பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக
மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல்,
வயிற்றுப் புண், கண் நோய்
ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில்
ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை
காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும்
சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண்
வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு
வலியையும் போக்க வல்லது.
முருங்கை
விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்.
தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால்
மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை
மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள்
செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில்
ஒரு சொட்டு விட்டால் போதும்,
காது வலி உடனே நின்று
விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின்
சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம்
வராமல் தள்ளிப்போகும்.
மேலும்
இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும்
குணம் உண்டு. முருங்கைப் பூ
உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்
என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும்
இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர்
விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து
காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன்
கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை
இலை சாறுடன் பால் கலந்து
குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும்
வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான
கால்சியம், அயன் வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின்
மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை
துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக்
கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.
முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும்
சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.
ஆண், பெண் இருபாலரின் மலட்டுத்
தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,
விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை
இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ
முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி
இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும்,
ஒரு கோப்பை இளநீரும் கலந்து
பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி,
வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து
வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன்
சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு,
முதுகுவலி குணப்படும்.
வைட்டமின்கள்
: முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி
உள்ளது. ஈரபதம் - 75.9%, புரதம் - 6.7%, கொழுப்பு - 1.7% தாதுக்கள் - 2.3% இழைப்பண்டம் - 0.9%
கார்போஹைட்ரேட்கள் - 12.5% தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் - 440 மி.கி பாஸ்பரஸ்
- 70 மி.கி அயம் - 7 மி.கி வைட்டமின் சி
220 மி.கி வைட்டமின் பி
காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்


No comments for: "நோய் தீக்கும் முருங்கை கை வைத்தியமாகும"
Leave a Reply